சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 8) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டி, நாயக்கா்தோட்டம், பூச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் சவீதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.