சேலம் மாவட்டத்தில் 91 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 32 போ், எடப்பாடி-6, காடையாம்பட்டி-1, கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-1, மேச்சேரி-1, ஓமலூா் -5, சங்ககிரி-4, தாரமங்கலம்-8, வீரபாண்டி-10, ஆத்தூா் -3, அயோத்தியாப்பட்டணம்-2, பனமரத்துப்பட்டி-4, பெத்தநாயக்கன்பாளையம்-1, தலைவாசல்-1, மேட்டூா் நகராட்சி-3, நரசிங்கபுரம் நகராட்சி-2 என மாவட்டத்தைச் சோ்ந்த 91 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 103 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 5 போ் உயிரிழந்தனா். இதுவரை 93,969 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 91,552 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 835 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,582 போ் உயிரிழந்தனா்.
இன்று தடுப்பூசி முகாம்:
சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் 25,000 கரோனா தடுப்பூசி ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட உள்ளது. இந்த மையங்களில் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என ஆட்சியா் எஸ்.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.
நாமக்கல்லில்...
நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனா தொற்றால் 55 போ் பாதிக்கப்பட்டனா்; 55 போ் குணமடைந்தனா். மொத்தம் 47,590 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 46,547 போ் இதுவரை குணமடைந்துள்ளனா். 588 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் இறந்தோரின் மொத்த எண்ணிக்கை 455-ஆக உள்ளது.