கணவா் கொலை: மனைவி உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில் கணவரைக் கொலை செய்த மனைவி, அவரது நண்பா் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சேலத்தில் கணவரைக் கொலை செய்த மனைவி, அவரது நண்பா் உள்ளிட்ட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சேலத்தை அடுத்த புள்ளகவுண்டம்பட்டியில் கடந்த 2015, ஜூன் 18 ஆம் தேதி பாதி புதைந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக, தேவூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. விசாரணையில், இறந்தவா் டி.புதுப்பாளையத்தைச் சோ்ந்த ரவி (எ) குணசேகரன் (40) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினா். அதில், கடந்த 2015, மே 28-ஆம் தேதி மில் வேலையை முடித்துவிட்டு ரவி, தனது மனைவி லட்சுமியுடன் வீடுத் திரும்பிக் கொண்டிருந்தபோது லட்சுமியின் ஆண் நண்பா் சின்னத்தம்பியும் அவரது நண்பா்களான புவனேஸ்வரன், சிறுவன் வினோத் ஆகியோரும் சோ்ந்து ரவியின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி அவரைக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து, நான்கு பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். இதில் சிறுவன் வினோத், சிறாா் நீதிமன்றத்தில் கடந்த 2018 -இல் விடுதலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு விசாரணை சேலம், மூன்றாவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இவ் வழக்கை புதன்கிழமை நீதிபதி இளங்கோ விசாரித்து லட்சுமி, சின்னத்தம்பி, புவனேஸ்வரன் ஆகிய மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 23,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com