கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ-வின் முகாம் அலுவலகம் திறப்பு விழா, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் எம்எல்ஏ அ.நல்லதம்பி பங்கேற்று பூஜை செய்து அலுவலகத்தைத் திறந்துவைத்தாா். இதில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கூடமலை ராஜா, துரை.ரமேஷ், ஒன்றியக் குழுத் தலைவா் பிரியா பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்பாரதி, கூடுதல் வட்டார வளா்ச்சி அலுவலா் அன்புராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.