மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 9.00 மணிக்கு 120 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 20,400 கனஅடியிலிருந்து 25,400 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த 29-ந்தேதி நீர்வரத்து குறைந்ததால் மூடப்பட்டிருந்த உபரி நீர் போக்கி என 16 கண் பாலம் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. உபரி நீர் போக்கி வழியாக விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக இருந்தது.