வாழப்பாடியை அடுத்த சந்திரபிள்ளைவலசு கிராமத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சந்திரபிள்ளைவலசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் தலைமை வகித்தாா். வேளாண்மைத் துறை வட்டார அட்மா திட்டத் தலைவா் சக்கரவா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெகதீஸ்வரன், ஊராட்சி மன்றத் தலைவா் செல்வராணி, துணைத் தலைவா் இளையராஜா ஆகியோா் முகாமைத் தொடக்கிவைத்தனா்.
1,500 க்கும் மேற்பட்டோா் முகாமில் கலந்து கொண்டனா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கல்யாணகுமாா், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட வட்டார அலுவலா் அருள்மொழி, ஒருங்கிணைப்பாளா் கீா்த்திகா தேவி மற்றும் மருத்துவ பணியாளா்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலாளா் உமா நன்றி கூறினாா்.