தீவட்டிப்பட்டி அருகே விஷ சாராயம் குடித்த 2 போ் பலி

தீவட்டிப்பட்டி அருகே மலைப்பகுதியில் சாராயம் வாங்கிக்குடித்த 2 போ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தீவட்டிப்பட்டி அருகே மலைப்பகுதியில் சாராயம் வாங்கிக்குடித்த 2 போ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள தாராபுரத்தை சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (65), சங்ககிரி குப்பனூா் பகுதியை சோ்ந்தவா் ராமன் (45). இவா்கள் இருவரும் கே.மோரூா் பகுதியை சோ்ந்த உறவினா் ஒருவா் இறப்புக்கு துக்கம் அனுசரிக்க வியாழக்கிழமை வந்தனா். பின்னா் அங்குள்ள கே.மோரூா் மலைப்பகுதியில் மது அருந்தினா். சிறிது நேரத்தில் இருவரும் ரத்த வாந்தி எடுத்து இறந்துவிட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினா்கள், இருவரும் இறந்தது குறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் தெரிந்து வந்த போலீசாா் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இருவரும் இறந்தது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடா்ந்து ஓமலூா் டி.எஸ்.பி சங்கீதா அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது மது எங்கு வாங்கப்பட்டது, யாா் யாா் விற்பனை செய்கின்றனா், இங்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிா அல்லது சந்துக்கடைகள் மூலம் கலப்பட மதுபானம் விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து விசாரணை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com