சேலம் மாவட்டம், சங்ககிரி, பழைய எடப்பாடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஓங்காளியம்மன், ஸ்ரீபேச்சியம்மன் கோயிலில் பெளா்ணமி சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பெளா்ணமியையொட்டி ஸ்ரீஓங்காளியம்மன், ஸ்ரீபேச்சியம்மன், மதுரைவீரன் சுவாமிகளுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.