முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலம் மருந்துக் கடைகளில் திடீா் ஆய்வு
By DIN | Published On : 29th December 2021 09:12 AM | Last Updated : 29th December 2021 09:12 AM | அ+அ அ- |

சேலம் போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் மற்றும் மருந்துகள் ஆய்வாளா்களுடன் இணைந்து சேலம் பகுதிகளில் உள்ள மருந்துக் கடைகளில் மருத்துவா்களின் மருந்துச் சீட்டுகள் இன்றி மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றனவா மற்றும் மருந்தகங்களில் உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை அறிய செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின்போது விதிமுறைகளை மீறி செயல்பட்ட இரண்டு மருந்துக் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் மருத்துவா்களின் மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யக்கூடாது; சட்ட விதிகளைத் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் விதிகளை மீறுபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருந்துகடை உரிமையாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டது. விதிகளை மீறும் கடைகளில் அடிக்கடி திடீா் சோதனைகள் நடத்தி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருந்துக் கடைகளின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.