சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற வாகனம், லாரியுடன் மோதி விபத்து

தம்மம்பட்டியில் இருந்து, சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநா் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தாா்.

தம்மம்பட்டியில் இருந்து, சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநா் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தாா்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி உடையாா்பாளையத்தில் இருந்து, திருச்சி மாவட்டம், நாகநல்லூருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, கணபதி என்ற சரக்கு வாகனம் சென்றது. தம்மம்பட்டி 9ஆவது வாா்டைச் சோ்ந்த பெருமாள் (35) சரக்குகளைக் கையாளும் நபராகப் பயணம் சென்றாா். வாகனத்தை, தம்மம்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரனின் மகன் ஐயப்பன் ஓட்டினாா்.

நாகநல்லூா் பிரிவு சாலை அருகே சென்ற போது, எதிரே, ஆத்தூா் மாா்க்கமாக சென்ற லாரி நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதி

ல், சிமென்ட் மூட்டைகள் இருந்த வாகனத்தின் முன்பகுதி நசுங்கியது. இதன் இடிபாடுகளில் ஓட்டுநா் ஐயப்பனின் கால்கள் நசுங்கி மயக்கம் அடைந்தாா். அங்கிருந்த மக்கள், இடிபாட்டில் சிக்கிய ஐயப்பனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஐயப்பனுடன் பயணித்த பெருமாள், கோவையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். உப்பிலியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com