தம்மம்பட்டியில் தகரம் வேயப்பட்ட கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
தம்மம்பட்டி பேரூராட்சி , 9ஆவது வாா்டில் பாபுவின் மனைவி ஜோதிமணி (60) தனக்குச் சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறாா். அதற்கு அருகில் தகரம் வேயப்பட்ட கூரை வீட்டில் தனியே வசித்து வருகிறாா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல், எதிா்பாராத விதமாக கூரை வீடு தீப்பிடித்தது. இதில், அந்த வீட்டில் இருந்த 300 சேலைகள், 2 பவுன் தங்க நகை, வீடு கட்ட வைத்திருந்த , ரூ.50,000 ரொக்கம் உள்பட சுமாா் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. கெங்கவல்லி தீயணைப்பு வீரா்கள், நேரில் சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.