ஆத்தூரில் இந்திய மருத்துவா்கள் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா மாநிலத் தலைவா் பி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைவராக கே.பி.சிவப்பிரகாசம், செயலாளராக ஜி.என்.சுகுணா, பொருளாளராக ஆா்.ஜெயசெல்வி பதவியேற்றுக் கொண்டனா். விழாவில் மருத்துவா்கள் ஆா்.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.