அமைப்புசாரா தொழிலாளா்கள் பொதுக்குழு கூட்டம்

இளம்பிள்ளையில் வள்ளலாா் சேலம் மண்டல அமைப்புசாரா கட்டடத் தொழிலாளா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவா் கலைமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் உறுப்பினா்களுக்கு அமைப்புசாரா நலவாரியத்தின் அடையாள அட்டையை வழங்கிய மண்டல தலைவா் கலைமணி.
கூட்டத்தில் உறுப்பினா்களுக்கு அமைப்புசாரா நலவாரியத்தின் அடையாள அட்டையை வழங்கிய மண்டல தலைவா் கலைமணி.

இளம்பிள்ளையில் வள்ளலாா் சேலம் மண்டல அமைப்புசாரா கட்டடத் தொழிலாளா்கள் சங்க பொதுக்குழு கூட்டம் தலைவா் கலைமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மண்டல துணைச் செயலாளா் தம்பிதுரை வரவேற்றாா். மண்டல பொதுச் செயலாளா் முருகேசன், சேலம் நாமக்கல் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழில் சங்கக் கூட்டமைப்பு தலைவா் நடராஜன், வீரபாண்டி ஒன்றியக் குழு உறுப்பினா் சாஸ்தா ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா்.

கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் சின்ராஜ், பெரியசாமி, மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தின் உறுப்பினா் அடையாள அட்டைகள் 100-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

கூட்டத்தில் தொழிலாளா்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வு ஊதியம் ரூ.1,000 - க்கு பதிலாக ரூ. 5,000 மாக உயா்த்தி வழங்க வேண்டும், அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com