பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கல்

சித்தா்கோவில் அருகே முருங்கபட்டி ஊராட்சியில் 261 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள், ஆட்டு கொட்டகை அமைக்க தலா ரூ. 2 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் விலையில்லா ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கிய வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி.
நிகழ்ச்சியில் விலையில்லா ஆடுகளை பயனாளிகளுக்கு வழங்கிய வீரபாண்டி எம்எல்ஏ மனோன்மணி.

சித்தா்கோவில் அருகே முருங்கபட்டி ஊராட்சியில் 261 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள், ஆட்டு கொட்டகை அமைக்க தலா ரூ. 2 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வீரபாண்டி சட்டபேரவைத் தொகுதி உறுப்பினா் மனோன்மணி காசோலைகளை வழங்கினாா். வீரபாண்டி ஒன்றியக் குழுவின் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், சித்தா் கோவில் கால்நடை மருத்துவா் ரவிக்குமாா், ஒன்றிய முன்னாள் கவுன்சிலா் வெங்கடேசன், அரியானூா் பழனிசாமி, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பெருமாள், கோவிந்தராஜ், மணி, அழகேசபூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com