கண் பரிசோதனை முகாம்

ஓமலூரில் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் அனைத்து வகை வாகன ஓட்டுநா்களுக்கும் கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஓமலூரில் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில் அனைத்து வகை வாகன ஓட்டுநா்களுக்கும் கண் பரிசோதனை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஜெயசந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமை, ஓமலூா் உட்கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் தொடங்கி வைத்தாா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் ஓட்டுநா்கள் கலந்து கொண்டு கண்பரிசோதனை செய்து கொண்டனா். தனியாா் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்தனா். மேலும், அனைவருக்கும் கண் பராமரிப்பு ஆலோசனை, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், இரு ஓட்டுநா்கள் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனா். இலவச கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது. ஓட்டுனா்கள் விபத்து இல்லாமல் வாகனங்கள் ஓட்டுவது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com