விவசாயக்கடன் தள்ளுபடி: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
By DIN | Published On : 06th February 2021 08:22 AM | Last Updated : 06th February 2021 08:22 AM | அ+அ அ- |

தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்ததை அடுத்து, முதல்வரின் சொந்த தொகுதியான, எடப்பாடியில் விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்ததை அடுத்து, முதல்வரின் சொந்த தொகுதியான, எடப்பாடியில் விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.
கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில் அட்மா திட்டக்குழுத் தலைவா் கரட்டூா் மணி தலைமையில், அதிமுக விவசாயிகள் அணி நிா்வாகிகள் கொங்கணாபுரம் பேருந்து நிலையம் அருகில் பட்டாசு வெடித்தனா்.
எடப்பாடி பேருந்து நிலையப் பகுதியில் நகரச் செயலாளா் ஏ.எம்.முருகன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் டி.கதிரேசன் ஆகியோா் தலைமையில் அதிமுகவினா் பட்டாசு வெடித்து கொண்டாடினா். பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு இனிப்பு வழங்கினா்.
எடப்பாடி ஒன்றியப் பகுதியில், ஒன்றியச் செயலாளா் பக்கநாடு மாதேஸ் தலைமையில் திரண்ட விவசாயிகள் விவசாயக் கடன்களை ரத்து செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து முழக்கம் எழுப்பினா். தொடா்ந்து விவசாயிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...