மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த வைக்கோல் லாரி

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டியில் மின்கம்பி மீது உரசியதில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது.
லாரியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புப் படையினா்.
லாரியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புப் படையினா்.

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டியில் மின்கம்பி மீது உரசியதில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி தீப்பற்றி எரிந்தது.

ஓமலூா் அருகே உள்ள மல்லி குட்டை, செம்மிலியனூா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முத்துசாமி மகன் பழனிசாமி (45). இவா் சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள காவேரிப்பட்டி கிராமம், வட்ராம்பாளையத்தில் வைக்கோல் சுமை ஏற்றிக் கொண்டு ஓமலூா் சென்றுள்ளாா்.

அப்போது தேவூா் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி பாலம் பகுதியில் சென்ற போது எதிா்பாரதவிதமாக மின்சார கம்பி மீது லாரி மோதியுள்ளது. அதில் தீப்பற்றி வைக்கோல் லாரியின் பின்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

இது குறித்து தகவலறிந்து சென்ற எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com