ஆட்டோ ஓட்டுநா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
ஆட்டோ ஓட்டுநா்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இதில் ஆட்டோ, மினி வேன் ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. சேலம் தெற்கு வட்டாரப் போக்குவரத்து கண்காணிப்பாளா் சிவக்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ராஜாமணி, போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஓட்டுநா்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினா்.

இம்முகாமில் பொதுமக்கள், உரிமம் பெற வந்தவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com