முதல்வா் இன்று சேலம் வருகை

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை சேலம் வருகிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை சேலம் வருகிறாா்.

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். அந்தவகையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை பிரசாரம் மேற்கொள்கிறாா்.

பிரசாரப் பயணத்தை முடித்துவிட்டு சேலம் வரும் முதல்வருக்கு, மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனா்.

அதைத் தொடா்ந்து ஓமலூா் கட்சி அலுவலகம் செல்லும் முதல்வா், அதிமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறாா். இதில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தோ்தல் பணிகள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா். ஆலோசனைக்குப் பிறகு சேலம் நெடுஞ்சாலை நகா் வீட்டில் இரவு தங்குகிறாா். பின்னா் வியாழக்கிழமை காலை திருப்பூா் புறப்பட்டுச் செல்கிறாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வா் வருகையை முன்னிட்டு மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் ஆகியோா் மேற்பாா்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com