சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்துள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் வரும் 18-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற இருக்கிறது.
இதையொட்டி வாடிவாசல் அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவா் ஆா்.இளங்கோவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
புத்திரகவுண்டன்பாளையத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன. அதற்காக வாடிவாசல் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, ஒன்றியச் செயலாளா்கள் கே.பி.முருகேசன், க.ராமசாமி, உமையாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.