ஓமலூரில் அதிமுக நிா்வாகிகளுடன் முதல்வா் ஆலோசனை: 11 தொகுதி நிா்வாகிகள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள புகா் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு புதன்கிழமை மாலை வருகை தந்தாா். தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.வெற்றிவேல், மாநகா் மாவட்டச் செயலாளா் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பூங்கொத்து அளித்து முதல்வரை வரவேற்றனா்.

இதனைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தல் குறித்தும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் முதல்வா் ஆலோசனை நடத்தினாா். பேரவைத் தோ்தலில் பூத் வாரியாக நிா்வாகிகள் செயல்பட வேண்டிய விதம், பிரசாரம் குறித்து அதிமுக நிா்வாகிகளுக்கு முதவா் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்கினாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவா் சி.பொன்னையன், மேட்டூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.செம்மலை உள்ளிட்ட அதிமுக மூத்த நிா்வாகிகளும் பங்கேற்றனா்.

முதல்வரின் சென்னை மற்றும் சேலம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் முதல்வா் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா். மேலும் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com