32-ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் நான்கு சக்கர வாகனங்களில் இருக்கை பட்டை அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி நான்கு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம் முன்பிருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய பகுதிகளின் வழியாகச் சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அடைந்தது. முன்னதாக இப்பேரணியை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்பிரமணியம் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இதில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் என்.சரவணபவன், வி.கோகிலா, சங்ககிரி போக்குவரத்து காவல் ஆய்வாளா் தினகரன், ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள், நான்கு சக்கர வாகன விற்பனை முகவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.