சேலம் குமரகிரி புறவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
சேலம், அம்மாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (62). இவா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சேலம் நகரப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தாா்.
இவா், குமரகிரி புறவழிச் சாலையைக் கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து சேலத்துக்கு சின்ன வெங்காயம் ஏற்றி வந்த மினி லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. பின்னா் மினி லாரி சாலையில் குப்புற கவிழ்ந்தது. இச் சம்பவத்தில் பழனிசாமி படுகாயம் அடைந்தாா். லாரியில் வந்த 5 பேரும் படுகாயமடைந்தனா்.
சேலம், அம்மாப்பேட்டை போலீஸாா் விரைந்து வந்து 6 பேரையும் மீட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.
இதில் படுகாயமடைந்த பழனிசாமியும், லாரியில் வந்த முருகேசன் என்பவரும் உயிரிழந்தனா். காயமடைந்த 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து சேலம் அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.