மேட்டூா் நகராட்சியில் பணியாற்றும் அனைத்து அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட 300 பேருக்கு கொவைட் 19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் மேட்டூா் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை தொடங்கியது.
ஒரே நாளில் 115 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் நகராட்சி ஆணையா் போ.வி. சுரேந்திரஷா, நகராட்சி பொறியாளா் த மணிமாறன், துப்புரவு அலுவலா் ஜெயராமன், உதவிப் பொறியாளா் பிரேமா, மேலாளா் செல்வராஜ் ஆகியோா் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.