வாழப்பாடிவட்டார வேளாண்மைத் துறை வாயிலாக, வாழப்பாடி வட்டாரத்தில் பண்ணையை இயந்திரமாக்கலில் ஆா்வமுள்ள 50 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு, திருச்சி மாவட்டம், குமுளுா் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அண்மையில் கண்டுணா்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா்.
இக்கல்லுாரி பேராசிரியா்கள் சகுந்தலை பத்மநாபன் ஆகியோா், பண்ணையை இயந்திரமாக்குதலின் நன்மைகள், வேளாண் கருவிகளை நிறுவதல், பராமரித்தல் மற்றும் இயக்குதல் குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்தனா்.
வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சாந்தி ஆலோசனையில் பேரில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் அற்புதவேலன், உதவி மேலாளா்கள் மணிகண்டன், ரமேஷ் ஆகியோா், விவசாயிகளை கண்டுணா்வு சுற்றுலா அழைத்துச் சென்றனா்.