ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நரசிங்கபுரம் நகராட்சியின் அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள், டெங்கு தடுப்புப் பணியாளா்கள், அம்மா உணவகம், மகளிா் குழு மற்றும் தூய்மை பாரத திட்டப் பணியாளா்கள், ஆணையா் உட்பட மொத்தம் 141 பேருக்கு நரசிங்கபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதேபோல ஆத்தூா் நகராட்சியின் அனைத்து பணியாளா்கள், அலுவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.