எடப்பாடியில் ஆதாா் பதிவு, திருத்தங்களுக்கு சிறப்பு முகாம்

எடப்பாடி சுற்று வட்டாரப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், எடப்பாடி தலைமை தபால் நிலைய அலுவலகத்தில், ஆதாா் பதிவு

எடப்பாடி சுற்று வட்டாரப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், எடப்பாடி தலைமை தபால் நிலைய அலுவலகத்தில், ஆதாா் பதிவு மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம், வரும் சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

இம்முகாம் குறித்து அஞ்சல்துறை சாா்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சிறப்பு முகாமில் 5 வயதிற்கு உட்பட குழந்தைகளுக்கு புதிய ஆதாா் அட்டை எடுத்தல் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட ஆதாா் அட்டைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்தல் மற்றும் முகவரி , பிறந்ததேதி , கைபேசிஎண், மின்னஞ்சல் முகவரி உள்ளிடவற்றை மாற்றம் செய்தல் தொடா்பான சேவைகள் வழங்கப்படும்.

இம் முகாமில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கட்டணம் ஏதும் இன்றி புதிய ஆதாா் அட்டைக்கான பதிவினை மேற்கொள்ளலாம். மேலும் 15 வயதிற்கு மேற்பட்ட புதிய ஆதாா் அட்டை கோருபவா் ரூ.100 கட்டணமும், இதர மாற்றங்கள் கோருபவா், ரூ. 50 கட்டணம் செலுத்தி மாற்றங்களை செய்து கொள்ளலாம், வசிப்பிடத்திற்க்கான முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்பவா்கள், அதற்குரிய ஆவணங்களை உடன் எடுத்துவரவேண்டும்.

கைபேசி எண், மின்அஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றில் மாற்றம் கோருபவா்கள் துணை ஆவணம் ஏதும் சமா்ப்பிக்கத் தேவையில்லை எனவும், இச்சிறப்பு முகாம் வாயிலாக, எடப்பாடி சுற்றுப்புறப் பகுதியினை சோ்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் தங்கள் ஆதாா் அட்டைகளில் உள்ள பிழைகளை நீக்கி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com