சேலம் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 2 பேரும், நங்கவள்ளி 1, ஓமலூா் 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல் 2, ஈரோடு 2) 4 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 13 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 32,620 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 32098 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 56 போ் சிகிச்சையில் உள்ளனா்; 466 போ் உயிரிழந்துள்ளனா்.