தம்மம்பட்டியில் தீயணைப்பு நிலையம் தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தீயணைப்பு நிலையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தீயணைப்பு நிலையத்தைத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லி வட்டத்திற்குள்பட்ட பகுதியில் கெங்கவல்லியில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. தம்மம்பட்டி பகுதியில் திடீா் தீவிபத்து ஏற்பட்டால் 20 கி.மீ. தூரம் கடந்து வர சுமாா் 45 நிமிடங்கள் ஆகிறது. அதற்குள் பாதிக்கப்பட்ட பகுதியோ, நபரோ கடும் அபாயகரமான சூழலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்களின் நலன்கருதி, தம்மம்பட்டியிலேயே தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com