பிஎஸ்என்எல் ஊழியா்கள் உண்ணாவிரதம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு உரிய தேதியில் ஊதியம் வழங்க வலியுறுத்தி சேலம் பொது மேலாளா் அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியா்களுக்கு உரிய தேதியில் மாதந்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். துறை சாா்ந்த போட்டித் தோ்வுகளை உடனடியாக நடத்த வேண்டும், மூன்றாவது ஊதிய மாற்றம் சம்பந்தமாக வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும். பணியில் உள்ள ஊழியா்களுக்கும் ஓய்வூதியா்களுக்கு மருத்துவ படிகளை பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவா் ஹரிகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தை ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் பாஸ்கரன் தொடக்கி வைத்தாா்.

இதில் பிஎஸ்என்எல் ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கோபால், ஒப்பந்த ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் செல்வம் உள்ளிட்டோா் உரையாற்றினாா்.சி.ஐ.டி.யூ. சாலை போக்குவரத்து சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.கே.தியாகராஜன், பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com