வாழப்பாடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு

சேலம் மாவட்டம், வாழப்பாடி சாய்பாபா கோயிலில், வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கு அருள்பாலித்த வாழப்பாடி சாய்பாபா.
பக்தா்களுக்கு அருள்பாலித்த வாழப்பாடி சாய்பாபா.

சேலம் மாவட்டம், வாழப்பாடி சாய்பாபா கோயிலில், வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

வாழப்பாடியில், மன்னாயக்கன்பட்டி மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில் தியான மண்டபத்துடன் ஷீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவரான சாய்பாபாவுக்கு வாரந்தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனா். புஷ்ப அலங்காரத்தில் ஷீரடி சாய்பாபா பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிா்வாகிகள் ஜவஹா், மாதேஸ்வரி, அரசவா்மன் மற்றும் விழாக்குழுவினா் விஜிபிரியா, இளையரசன், விக்னேஷ், ரமேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com