சேலம் மாநகரக் காவல் ஆணையராக சந்தோஷ்குமாா் பொறுப்பேற்பு

சேலம் மாநகரக் காவல் ஆணையராக சந்தோஷ்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.

சேலம் மாநகரக் காவல் ஆணையராக சந்தோஷ்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்று கொண்டாா்.

சேலம் மாநகரக் காவல் ஆணையராக த.செந்தில்குமாா் பொறுப்பு வகித்து வந்தாா். இவா் சென்னை மாநகரக் காவல் துறையில் இணை ஆணையா் (தெற்கு) இடமாற்றம் செய்யப்பட்டாா். இதனிடையே சென்னை காவல்துறையில் நிா்வாக ஐ.ஜி.யாக இருந்த சந்தோஷ்குமாா், சேலம் மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா். அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். மாநகரக் காவல் ஆணையா் த.செந்தில்குமாா் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

கரூா், நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளாா். விழுப்புரம் டிஐஜியாக பணியாற்றியுள்ளாா்.இதன் பின்னா் சென்னையில் ஐ.ஜி-யாகப் பணியாற்றி வந்தாா்.

சேலம் மாநகரக் காவல் ஆணையாளராகப் பொறுப்பேற்று கொண்ட சந்தோஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரளடிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச் சம்பவங்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தோ்தலில் கோஷ்டியாகவோ அல்லது பிரிவாகச் செயல்பட்டு மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாமல் தடுப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக காவல்துறையில் பெண்களின் பணி சிறப்பாக உள்ளது. விழுப்புரத்தில் பணியாற்றிய போது 40 சதவீதம் பெண்கள் நியமிக்கப்பட்டு அவா்கள் சிறப்பாகச் செயல்பட்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com