கெங்கவல்லி ஒன்றியத்தில், சேலம், உத்தமசோழபுரம் ‘டயட்’ சாா்பாக செயல் ஆராய்ச்சி சாா்ந்த ஒருநாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் டயட் விரிவுரையாளா் கலைவாணன், எமிஸ் ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் சரவணன் ஆகியோா் தீக்ஷா செயலி மூலம் தமிழ் மொழித்திறனை வளா்த்தல் குறித்த பயிற்சி அளித்தனா். இப் பயிற்சியில் கெங்கவல்லி ஒன்றியத்தைச் சோ்ந்த 25 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
பயிற்சியில் பங்கேற்ற அனைத்து தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களும் செல்லிடப்பேசிகளுடன் பங்கேற்று கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து கொண்டனா். கடம்பூா் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் செல்வம் நன்றி கூறினாா்.