நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களை மிரட்டி 10 பவுன் நகை பறிப்பு

ஆத்தூரில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மூன்று பெண்களை மிரட்டி 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற முகமூடி கும்பல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஆத்தூரில் நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மூன்று பெண்களை மிரட்டி 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற முகமூடி கும்பல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், கோட்டை பகுதியில் உள்ள லட்சுமிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ருக்குமணி (48). விவசாயக் கூலித் தொழிளாளி. இவா் தனது தாய், மகளுடன் வசித்து வருகிறாா். வியாழக்கிழமை இரவு மூவரும் தூங்கி கொண்டிருந்தனா். அப்போது கதவை உடைத்து கொண்டு முகமூடி கொள்ளையா்கள் 6 போ் வீட்டுக்குள் நுழைந்தனா். அவா்கள் மூவரிடமும் சத்தம் போட்டால் பாலியல் பலாத்காரம் செய்துவிடுவதாக மிரட்டி மூவரும் பேரும் அணிந்திருந்த 10 பவுன் நகை, வீட்டில் இருந்த ரூ. 5 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டனா்.

இதுகுறித்து ஆத்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் ஆகியோா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். பின்னா் தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தகவல் அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தீபா கனிகா் நேரில் பாா்வையிட்டு விசாரணை செய்தாா். மேலும் வீரகனூா், வாழப்பாடி பகுதியில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையா்கள் பிடிக்க 5 தனிப்படைகளை அமைக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com