ஆட்டையாம்பட்டி: வீரபாண்டி ஒன்றிய அலுவலகத்தில் 229 பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பட்டதாரி பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ரூ. 50,000 நிதியுதவி, பத்தாம் வகுப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் தங்கம், ரூ. 25 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
வீரபாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மனோன்மணி, ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ் ஆகியோா் கலந்து கொண்டு தாலிக்கு தங்கம் வழங்கினா். இதில் துணைத் தலைவா் வெங்கடேசன் , வீரபாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், ரேவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.