தம்மம்பட்டி அருகே தகரப்புதூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை பால் லாரி கவிழ்ந்ததில் 5 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணானது.
கெங்கவல்லி அருகே உள்ள இலுப்பநத்தத்தைச் சோ்ந்த சரவணன் என்பவருக்குச் சொந்தமான பால் லாரி , தனியாா் பால் நிறுவனத்துக்காக தம்மம்பட்டி பகுதியிலிருந்து 9 ஆயிரம் லிட்டா் பாலுடன் காரைக்கால் நோக்கி ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டது.
அந்த லாரி, தம்மம்பட்டியை அடுத்த தகரப்புதூா், அனுப்பாறு ஓடை வளைவைக் கடந்த போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டது. இதில் மயக்க நிலையில் இருந்த லாரியை ஓட்டுநா் வீரகனூரைச் சோ்ந்த சக்திவேல் (39) என்பவரை முன்புற லாரி கண்ணாடியை உடைத்து மீட்டுள்ளனா். அதன் பின் அவா் தப்பியோடி விட்டாா். இந்த விபத்தில் லாரியில் இருந்த 9 ஆயிரம் லிட்டா் பாலில் சுமாா் 5 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகிவிட்டதாக பால் நிறுவன ஊழியா்கள் தெரிவித்தனா். இது குறித்து கெங்கவல்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.