சேலம், சித்தா்கோவில் அருகே அரியகவுண்டம்பட்டி, கல்லாங்காடு பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலில் தங்கத் தாலி, வெள்ளிக் கிரீடம் உள்ளிட்டபொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இக்கோயிலில் திருப்பணி நடைபெற்று வருவதால் வரும் புதன்கிழமை சுத்து பொங்கல் வைப்பதற்காக கோயிலில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் மா்ம நபா்கள் காளியம்மன் கோயில் பூட்டை உடைத்து 1.5 பவுன் தங்கத் தாலி, 0.75 கிலோ எடையுள்ள வெள்ளிக் கிரீடம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து கோயில் பூசாரி செல்வம் அளித்த புகாரின்பேரில் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளா் சந்திரகலா, போலீஸாா் மற்றும் தடயவியல் நிபுணா்கள் நேரில் வந்து கோயிலில் ஆய்வு செய்தனா். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை வைத்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.