புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்ட  பூமிபூஜை

புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்ட பூமிபூஜை

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலத்தூா் ரெட்டிப்பாளையத்தில் புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை, 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலத்தூா் ரெட்டிப்பாளையத்தில் புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை, புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்ற புதிய கட்டடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆலத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ஆலத்தூா் ரெட்டிப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றியம் சாா்பில் 15-ஆவது நிதிக்குழுவின் கீழ் ரூ. 6.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமிபூஜை செய்து, புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2019-2020இன் கீழ் ரூ. 17.64 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடத்தை தேவூா் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவரும், அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான கே.வெங்கடாசலம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தாா்.

இந்த விழாவுக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி எம்.மகேஸ்வரி மருதாசலம் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன், சங்ககிரி அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரராஜன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், முன்னாள் தொகுதி செயலா் வி.ஆா்.ராஜா, அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்ரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com