சனிக்கிழமை அன்று கொங்கணாபுரம் கூட்டுறவு ஏலமையத்தில், விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்.
சனிக்கிழமை அன்று கொங்கணாபுரம் கூட்டுறவு ஏலமையத்தில், விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள பருத்தி மூட்டைகள்.

கொங்கணாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் ரூ.2.30 கோடிக்கு பருத்தி விற்பனை

கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 8 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ 2 கோடியே 30 லட்சத்திற்கு விற்பனையானது. 

கொங்கணாபுரம் பகுதியில் இயங்கிவரும் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில், 8 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ 2 கோடியே 30 லட்சத்திற்கு விற்பனையானது. 
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில், வாரந்தோறும் சனிக்கிழமை அன்று விவசாயிகளின் விளைபொருட்களுக்கள் பொது ஏலம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தி, எள், நிலக்கடலை உள்ளிட்ட விளைபொருட்களை, விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை அன்று இம்மையத்திற்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்த 8 ஆயிரத்து 500  பருத்தி மூட்டைகளை, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் 1400 லாட்டுகளாக பிரித்து, பொது ஏலம் விட்டனர். 
ஏலத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த வியாபாரிகள், பருத்தி மூட்டைகளை ஏலம் கூறி மொத்த கொள்முதல் செய்தனர். இதில் டி.சி.ஹச் ரக பருத்தியானது, குவிண்டால் ஒன்று ரூ.8250 முதல் ரூ.9919 வரை விலைபோனது. 
அதேபோல் பி.டி.ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 6850 முதல் ரூ. 8032 வரை விற்பனையானது. சனிக்கிழமை முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம், ரூ.2 கோடியே 30 லட்சத்திற்கு பருத்தி வணிகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com