விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா

தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாழையில் மதிப்புக் கூட்டுதல் என்ற தலைப்பில் இரு நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

மகுடஞ்சாவடி வட்டார விவசாயிகள் அட்மா திட்டத்தின்கீழ் கண்டுணா்வு சுற்றுலாவாக திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா் நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வாழையில் மதிப்புக் கூட்டுதல் என்ற தலைப்பில் இரு நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியை தமிழ்நாடு வாழை உற்பத்தியாளா் நிறுவன இயக்குநா்கள் கல்யாணசுந்தரம், தீனதயாளன் ஆகியோா் அளித்தனா்.இந்த சுற்றுலாவுக்கான ஏற்பாட்டினை மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் மணிமேகலா தேவி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com