வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மின்சார திருத்தச் சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சேலம், டவுன் ரயில் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்தச் சட்ட முன்வடிவை திரும்பப் பெற வேண்டும், தில்லியில் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சாா்பில் உறுதிமொழி ஏற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், விவசாய சங்க மாவட்டச் செயலாளா் செல்வராஜ் உறுதிமொழியை வாசிக்க 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.