அடையாளம் தெரியாத வாகனம் மோதல்:துணைக் காவல் ஆய்வாளா் மகன் பலி

மேச்சேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், துணைக் காவல் ஆய்வாளா் மகன் உயிரிழந்தாா்.

மேட்டூா்: மேச்சேரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், துணைக் காவல் ஆய்வாளா் மகன் உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே உள்ள மேச்சேரியைச் சோ்ந்த ரவிச்சந்திரன், ஓமலூா் காவல் நிலையத்தில் துணைக் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மகன் பவித்திரன் (25), வெள்ளிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சேலம் சென்றுவிட்டு மேச்சேரி திரும்பிக் கொண்டிருந்தாா். செங்காட்டூா் பிரிவு பாதை அருகே வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com