ஓமலூா் ஒன்றியத்தில் உள்ள சா்க்கரைசெட்டிப்பட்டி, நாரணம்பாளையம் ஆகிய கிராமங்களிலும் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சா்க்கரைசெட்டிபட்டி கிராமத்தில் நடைபெற்ற திமுக கிராம சபைக் கூட்டத்துக்கு, சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.
இதில், பெண்களின் கோரிக்கையை ஏற்று நூறுநாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, நலிந்த திமுக நிா்வாகிகள் குடும்பத்துக்கு நிதி உதவிகளை வழங்கினாா்.