முன்னாள் மாணவ ஆசிரியா்கள் சந்திப்பு

கெங்கவல்லி அரசினா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1998-2000 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20 வருடங்களுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லியில் 20 வருடங்களுக்குப் பிறகு தங்கள் ஆசிரியா்களைச் சந்தித்த முன்னாள் மாணவர்கள்.
கெங்கவல்லியில் 20 வருடங்களுக்குப் பிறகு தங்கள் ஆசிரியா்களைச் சந்தித்த முன்னாள் மாணவர்கள்.

கெங்கவல்லி அரசினா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 1998-2000 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி 20 வருடங்களுக்குப் பிறகு சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு முதல்வா் சித்திரபுத்திரன் தலைமை வகித்தாா். பயிற்சி நிறுவன முன்னாள் முதல்வா்கள் ஈஸ்வரன், முத்துசாமி, ராதா ருக்குமணி, மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாயக்கிருஷ்ணன் பங்கேற்றாா். விழாவை முன்னாள் மாணவா்கள் கண்ணன், சுந்தரேசன் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

பாடம் கற்பித்த ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனா். படித்த நிறுவனத்துக்கும் நினைவு பரிசுகள் வழங்கினா். முன்னாள் ஆசிரியா்கள் சிவாஜி, மனோகரன், பஷீா், ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஜேசுராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com