நூற்பாலையில் பண மோசடி: மேலும் இருவா் கைது

நூற்பாலையில் பண மோசடி வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நூற்பாலையில் பண மோசடி வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் தேவராஜன். இவா், உடையாப்பட்டியில் நூற்பாலை வைத்துள்ளாா். இவரது ஆலையில் கணக்காளராகப் பணிபுரிந்த அந்தோணி அருள்ராஜ், கடந்த 2017-இல் ரூ. 13 கோடி கையாடல் செய்துள்ளாா்.

இதுதொடா்பான புகாரில் மோசடியில் ஈடுபட்ட அந்தோணி அருள்ராஜ் உள்பட 5 பேரை சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். வழக்கு விசாரணையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வாழப்பாடியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவரின் வங்கி கணக்கில் ரூ. 70 லட்சமும், கொண்டலாம்பட்டி நாட்டாமங்கலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரின் வங்கி கணக்கில் ரூ.14 லட்சமும் அந்தோணி அருள்ராஜ் செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com