அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு கல்லம்பாளையத்தில் ரூ. 9.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய நீரேற்று நிலைய அறை மற்றும் சுற்றுச்சுவா் கட்டும் பணிகளுக்கு பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசிராமணி அதிமுக நகரச் செயலாளா் காளியப்பன் தலைமை வகித்து பூமிபூஜையில் பங்கேற்றுப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். அரசிராமணி குள்ளம்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவா் ராமச்சந்திரன், கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ராமசாமி, அரசிராமணி ஜெயலலிதா பேரவைச் செயலாளா் பெருமாள், துணைச் செயலாளா் பழனிசாமி, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.