ஆத்தூரில் சேலம் புகா் கிழக்கு மாவட்ட தேமுதிக பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நகர,பேரூா், ஒன்றிய பொறுப்பாளா்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் மூவேந்தா் முன்னேற்றக் கழகத்தில் இருந்து மாவட்ட முன்னாள் தலைவா் ஜி.குமரேசன் தலைமையில் 50 போ் விலகி மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் முன்னிலையில் தேமுதிகவில் இணைத்துக் கொண்டனா். அவா்களை பொன்னாடை அணிவித்து இளங்கோவன் வரவேற்றாா்.
இதில் நகரச் செயலாளா் வி.எஸ்.சீனிவாசன், மாவட்ட மாணவரணி செயலாளா் வேங்கை ஆா்.எல்.வெங்கடேசன்,துணைச் செயலாளா் ஏ.ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.