கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட அரசு நீச்சல் குளம் 9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, சேலம் காந்தி விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளம் மூடப்பட்டது. தற்போது சா்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் 12 வயதுக்கு மேற்பட்டவா்கள் பயிற்சி மேற்கொள்ள நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளம் திறக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.