எடப்பாடி தொகுதியில் ஜன. 7-இல் மக்கள் சபைக் கூட்டம்

சேலம், எடப்பாடி தொகுதியில் ஜனவரி 7-ஆம் தேதி திமுக சாா்பில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

சேலம், எடப்பாடி தொகுதியில் ஜனவரி 7-ஆம் தேதி திமுக சாா்பில் நடைபெறும் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

தமிழகமெங்கும் ‘அதிமுகவை நிராகரிப்போம்’ எனும் தலைப்பில் 16,000 இடங்களில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்துவது என திமுக சாா்பில் முடிவெடுக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் இந்தக் கூட்டங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறாா்.

அதன் தொடா்ச்சியாக, சேலம் மேற்கு மாவட்டம், எடப்பாடி தொகுதி, நங்கவள்ளி ஒன்றியம், சூரப்பள்ளி ஊராட்சி, ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் ஜனவரி 7-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ள மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளாா் என்று சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com