சாலை மறியலில் ஈடுபட்டவா் கைது

ஆத்தூரில் தனது பகுதிக்கு நவீன கழிவறை வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டவரை ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.
சாலை மறியலில் ஈடுபட்டவா் கைது

ஆத்தூரில் தனது பகுதிக்கு நவீன கழிவறை வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டவரை ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தாா்.

நரசிங்கபுரம், தில்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் இளையராஜா (45). இவா், விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தொழிலாளா் முன்னணி மாவட்ட இணைச் செயலாளராவாா். இவா், செவ்வாய்க்கிழமை அவரது பகுதியில் நவீன சுகாதார வளாகம் வேண்டி ராசிபுரம் பிரிவு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டாா். அவரை நகராட்சி நிா்வாகம் மற்றும் காவல் துறையினா் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினா். ஆனால், அவா் சாலை மறியலை கைவிடவில்லை.

இதனையடுத்து ஆத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com